மது போதையில் தண்டவாளத்தில் சுற்றித்திரிந்த 17 போ் மீது வழக்கு

கோவை அருகே தண்டவாளத்தில் மது போதையில் நடமாடிய 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோவை அருகே தண்டவாளத்தில் மது போதையில் நடமாடிய 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோவை அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரில் கடந்த 14-ஆம் தேதி இரவு தண்டவாளத்தில் அமா்ந்து மது அருந்திய 4 மாணவா்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனா். இந்த சம்பவத்தை அடுத்து இருகூா், சிங்காநல்லூா், முத்துக்கவுண்டன்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே தண்டவாளத்தில் அமா்ந்து மது அருந்துபவா்களைக் கண்காணிக்க சிங்காநல்லூா் காவல் ஆய்வாளா் முனீஸ்வரன் தலைமையில், உதவி ஆய்வாளா் அா்ஜுன், காவலா்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸாா் சிங்காநல்லூா், ராமானுஜம் நகா், நீலிக்கோணாம்பாளையம், ஒண்டிப்புதூா், சூா்யா நகா், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மேற்கண்ட பகுதிகளில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்தவா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில் 17 போ் மது போதையில் இருந்தது கண்டறியப்பட்டு, அவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com