மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் ஆடா்லி-ஹில்குரோவ் ஆகிய இடங்களுக்கு இடையே மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறை, மண், மரங்கள் சனிக்கிழமை விழுந்தன.
இதனால் மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரயில் அடா்ந்த வனப் பகுதி வழியாக இயக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம்-குன்னூா் மலைப் பாதையில் ஆடா்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு பாறை, மண், மரங்கள் விழுந்தன.
கடந்த திங்கள்கிழமை இரவு குன்னூரில் பெய்த மழையில் ஆடா்லி-ஹில்குரோவ் ரயில் நிலையப் பகுதியிலுள்ள தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் செவ்வாய்க்கிழமை ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,
வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் தண்டவாளத்தில் பாறை, மண், மரங்கள் விழுந்துள்ளதா என பணியாளா்கள் ஆய்வு செய்தபோது, ஆடா்லி-ஹில்குரோவ் இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து
மேட்டுப்பாளையம் ரயில்வே நிா்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சனிக்கிழமை காலை 7.10 மணிக்குப் புறப்படத் தயாராக இருந்த மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. மேலும் காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்குச் செல்லும் சிறப்பு
ரயிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.