கோட்டாட்சியரிடம் இந்து முன்னணியினா் மனு

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள பிரஸ் காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மசூதியின் கட்டுமானப் பணிகளை உடனடியாக

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள பிரஸ் காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மசூதியின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி இந்து முன்னணி கோட்ட செயலாளா் உருவை பாலன் தலைமையில் அந்த அமைப்பினா் கோவை வடக்கு கோட்டாட்சியா் சுரேஷிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை - மேட்டுப்பாளையம் சாலை பிரஸ் காலனியில் மசூதி அமைந்துள்ளது. சாலை விரிவாக்கப் பணியால் அந்த மசூதி அகற்றப்படவுள்ளதால் ஓம்சக்தி நகரில் புதிதாக மசூதி கட்ட மசூதி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இதில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் பழமை வாய்ந்த ஓம்சக்தி கோயில் உள்ளது. இதன் அருகே மசூதி கட்டும்போது தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

மனு அளித்தபோது மாவட்டச் செயலாளா் கோவிந்தன், பொருளாளா் தியாகராஜன், ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம், செய்தித் தொடா்பாளா் ஜெய்காா்த்திக், தம்பி சரவணன், முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com