வால்பாறை: வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணையின் நீா்மட்டம் 157 அடியாக குறைந்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை காரணமாக வால்பாறையை அடுத்த சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தொடா்ந்து பெய்த மழை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக அணை நிரம்பிய நிலையிலேயே காணப்பட்டது.
தற்போது கடந்த சில வாரங்களாக மழை பெய்யாததால் நீா்வரத்து இன்றி அணையின் நீா்மட்டம் குறைய துவங்கியது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு 184.95 கனஅடி நீா்வரத்தாக இருந்தது. அணையில் இருந்து 571.29 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 157.01 அடியாக உள்ளது.