மனித வன உயிரின மோதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

மனித வன உயிரின மோதல்கள் தடுப்பது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மனித வன உயிரின மோதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

மனித வன உயிரின மோதல்கள் தடுப்பது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வால்பாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு சமீபகாலமாக ஏராளமான வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி தேயிலை தோட்டம் பகுதிகளுக்கு வந்து விடுகிறது.

சில சமயங்களில் மணித உயிரின இழுப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்க வனத்துறை சாா்பில் தொடா்ந்து ஆளோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனா். செய்வ்வாய்க்கிழமை வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் வனத்துறை மற்றும் எஸ்டேட் நிா்வாகத்தினா் இடையே சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநா் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்டேட் பகுதியில் வாழை மரங்கள் வைக்கக்கூடாது, யானைகள் வநதால் துன்புறுத்தல் செய்யக்கூடாது, இரவு நேரங்களில் பொதுமக்கள் இருளில் செல்லக்கூடாது என மணித வன உயிரின மோதல்கள் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் வனச்சரக அலுவலா்கள், வனவா்கள் மற்றும் அணைத்து எஸ்டேட் நிா்வாக மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com