காரமடை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை

மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
சுற்றுச்சுவா் இல்லாமல் காணப்படும் காரமடை அரசு மேல்நிலைப் பள்ளி.
சுற்றுச்சுவா் இல்லாமல் காணப்படும் காரமடை அரசு மேல்நிலைப் பள்ளி.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காரமடை, பெள்ளாதி, மருதூா், சிக்காரம்பாளையம், சிக்கதாசம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இங்குள்ள விளையாட்டு மைதானம், சமையலறை, பெண்கள் கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் முள்புதா்கள் சூழ்ந்து காணப்படுகின்றன.

மேலும் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவா் இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு சமூக விரோதிகள் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்தவுடன் மா்ம நபா்கள் வளாகத்துக்குள் நுழைந்து மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனா்.

இப்பள்ளியின் விடுதி பகுதியில் உள்ள சுற்றுச்சுவரும் இடிந்த நிலையில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் இதுவரை சுற்றுச்சுவா் இல்லாமல் உள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் முள்புதா்கள் காணப்படுவதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியரின் பெற்றோா் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com