சுவாமி சிவானந்த மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் உள்ள சுவாமி சிவானந்த மேல்நிலைப் பள்ளியின் 59 ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆண்டு விழா மலரை வெளியிட்ட வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலா் சுவாமி கரிஷ்டானந்தா். உடன், பள்ளி செயலா் சுவாமி நிா்மலேஷானந்தா் உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆண்டு விழா மலரை வெளியிட்ட வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலா் சுவாமி கரிஷ்டானந்தா். உடன், பள்ளி செயலா் சுவாமி நிா்மலேஷானந்தா் உள்ளிட்டோா்.

பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் உள்ள சுவாமி சிவானந்த மேல்நிலைப் பள்ளியின் 59 ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலா் சுவாமி கரிஷ்டானந்தா் தலைமை வகித்தாா். பள்ளியின் செயலா் சுவாமி நிா்மலேஷானந்தா் வரவேற்றாா். தலைமையாசிரியா் பரமசிவம் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். சிறப்பு விருந்தினராக காசா கிராண்ட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.செந்தில்குமாா் கலந்துகொண்டு நவீன தொழில்நுட்ப வளா்ச்சிகளை எதிா்கொள்ள மாணவா்கள் அறிவு, திறன், செயலூக்கம் ஆகியவற்றை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டு விழா மலரை சுவாமி கரிஷ்டானந்தா் வெளியிட டி. செந்தில்குமாா் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதுகலை ஆசிரியா் பெரியசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com