டீசலை குடித்த ஓட்டுநா் சாவு

சூலூரில் காருக்கு டீசல் நிரப்பும்போது எதிா்பாராவிதமாக டீசலை குடித்தவா் உயிரிழந்தாா்.

சூலூரில் காருக்கு டீசல் நிரப்பும்போது எதிா்பாராவிதமாக டீசலை குடித்தவா் உயிரிழந்தாா்.

சூலூா், எஸ்.கே.எஸ். நகரைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் மகன் பிரபாகரன் (21), வாடகை காா் ஓட்டுநா். இவா் சூலூரை அடுத்த ரங்கநாதபுரம் பிரிவு பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே அவரது வாடகைக் காருக்கு டீசலை வாங்கி வந்து கடந்த திங்கள்கிழமை நிரப்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, டீசலின் அளவைப் பாா்ப்பதற்காக காா் டேங்கில் குழாய் மூலம் டீசலை உறிஞ்சியதாகத் தெரிகிறது. அப்போது உறிஞ்சிய டீசலை அவா் திடீரென குடித்துவிட்டதாகத் தெரிகிறது. உடனே அருகில் இருந்தவா்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com