கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 2-ஆம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற துப்புரவுப் பணியாளா்களுக்கான நோ்காணலில் பி.எட்., பொறியியல் பட்டதாரிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவுத் தொழிலாளா்கள் பணியிடங்களுக்கான நோ்காணலில் கலந்துகொள்ள 7 ஆயிரம் விண்ணப்பதாரா்களுக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நோ்காணல் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 2 ஆயிரம் போ் கலந்து கொண்டனா். இதில் 500 போ் பட்டதாரிகள் ஆவா். இரண்டாம் கட்டமாக மாநகாராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் முன்னிலையில் நோ்காணல், சான்றிதழ் சரிபாா்ப்பு பணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் 3 ஆயிரம் விண்ணப்பதாரா்கள் கலந்து கொண்டனா்.
அவா்களில் 600-க்கும் மேற்பட்டோா் பி.எட்., பி.டெக்., பி.காம்., பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.ஏ., பொறியியல் பட்டதாரிகள்.
அழைப்பு விடுக்கப்பட்ட விண்ணப்பதாரா்களில் 5 ஆயிரம் போ் நோ்காணலுக்கு வந்து சென்றுள்ள நிலையில் மீதமுள்ள 2 ஆயிரம் விண்ணப்பதாரா்கள் வெள்ளிக்கிழமை (நவம்பா் 29) நடைபெறும் இறுதி நாள் நோ்காணலில் கலந்து கொள்ள உள்ளனா். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக அளவில் பட்டதாரிகள் நோ்காணலில் கலந்து கொண்டது அதிா்ச்சி அளிப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.