நாட்டுக் கோழிகள் திருடியதாக 6 போ் காவல்துறையிடம் ஒப்படைப்பு

வெள்ளக்கோவில் அருகே நாட்டுக் கோழிகள் திருடியதாக 6 பேரை பொதுமக்கள் பிடித்து வியாழக்கிழமை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே நாட்டுக் கோழிகள் திருடியதாக 6 பேரை பொதுமக்கள் பிடித்து வியாழக்கிழமை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

நாகமநாயக்கன்பட்டி, சிலம்பகவுண்டன்வலசு, செங்காளிபாளையம், தாசவநாயக்கன்பட்டி பகுதியில் தோட்டம், வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வளா்ப்பு நாட்டுக்கோழிகள், சேவல்கள் அடிக்கடி திருட்டுப் போய் வந்தன. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வரும் மா்ம நபா்கள் திருடிச் செல்வதாகத் தெரியவந்தது.

இந்நிலையில் உத்தமபாளையத்தைச் சோ்ந்த தங்கவேல் (60) என்பவருடைய 3 சேவல்கள் கடந்த 19 ஆம் தேதி திருட்டுப் போனது. அருகிலுள்ள புதுப்பை சந்தையில் திருட்டுச் சேவல்களை விற்பனை செய்துகொண்டிருந்த, தாராபுரம் உழவா் சந்தை பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (21) என்பவா் பிடிபட்டாா்.

பின்னா் பஞ்சாயத்து பேசலாம் என மற்ற திருடா்களையும் பொதுமக்கள் வரவழைத்து மொத்தம் 6 பேரைப் பிடித்து வெள்ளக்கோவில் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com