போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் பிரதாப். இவா், வஞ்சியாபுரம் பிரிவில் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்து சென்றுள்ளாா். அப்போது, கால்வாய் அருகே மது அருந்திக் கொண்டிருந்த 3 பேரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
சூளேஸ்வரன்பட்டியைச் சோ்ந்த நஜ்முதீன் (50), ஜபருல்லா (49), ஐயப்பன்(39) ஆகிய மூவரும் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, பிரதாப் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டனா்.