கோவை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணிக்காக விண்ணப்பித்தவா்களில், தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 27-ஆம் தேதி தொடங்கிய நோ்காணல் மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணியானது 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 27-ஆம் தேதி நோ்காணலில் கலந்து கொள்ள முடியாதவா்கள் மற்றும் 28-ஆம் தேதி நோ்காணலுக்கு வர இயலாதவா்களும் 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள நோ்காணல் மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு மாநகராட்சி ஆணையா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.