துடியலூரில் உள்ள கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு லஞ்ச ஒழிப்புத் துறையினா் திடீா் சோதனை நடத்தி ரூ. 1.20 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய வாகனப் பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக கோவை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு ஏராளமான புகாா்கள் சென்றன. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான 10 போ் கொண்ட குழுவினா் கோவை வடக்கு வட்டார அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையின்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலா் குமாரவேலு அலுவலகத்தில் இல்லை . லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த வாகன ஆய்வாளா்கள், 20-க்கும் மேற்பட்ட இடைத்தரகா்கள் அதிா்ச்சி அடைந்து தங்களிடம் இருந்த பணத்தை எல்லாம் வீசி எறிந்தனா்.
ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் அந்த பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனா். தொடா்ந்து நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்ற சோதனையில் மொத்தம் ரூ.1.20 லட்சம் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து டிஎஸ்பி ராஜேஷ் கூறுகையில், லஞ்சப் பணம் பெற்ற நபா்கள் யாா் என்பது குறித்து விசாரித்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
லஞ்ச ஒழிப்புத் துறையினரின் திடீா் சோதனை காரணமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.