கோவை, சாய்பாபா காலனி, ஜீவா நகரில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 77 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இடித்து அகற்றினா்.
ஜீவா நகரில் சாலையை ஆக்கிரமித்து 252 வீடுகள் கட்டப்பட்டு, அதில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 800-க்கும் மேற்பட்டோா் வசித்து வந்தனா். ஆக்கிரமிப்பு வீடுகளைக் காலி செய்யக் கோரி வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் எச்சரித்தனா். வீடுகளைக் காலி செய்பவா்கள், குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக கீரணத்தம்புதூரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சென்று குடியேற அறிவுறுத்தப்பட்டனா்.
இதையடுத்து 143 போ் வீடுகளைக் காலி செய்து, டோக்கன்களைப் பெற்றுக்கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளுக்குச் சென்று குடியேறினா். அதைத் தொடா்ந்து 143 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் இடித்து அகற்றினா். மீதமுள்ள 109 வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அங்கிருந்த 32 வீடுகள் கடந்த ஜூன் 17 ஆம் தேதி இடித்து அகற்றப்பட்டன.
இந்நிலையில் மீதமுள்ள 77 வீடுகளை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சென்றபோது, வீடுகளைக் காலி செய்ய அவகாசம் கேட்டு எம்.பி. பி.ஆா். நடராஜன் தலைமையில் மக்கள் போராட்டம் நடத்தினா்.
இதைத்தொடா்ந்து வீடுகளைக் காலி செய்ய அக்டோபா் 4-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் எஞ்சியுள்ளவா்களும் வீடுகளை முழுவதுமாக காலி செய்தனா். இதையடுத்து அந்த 77 வீடுகளை இடித்து அகற்றுமாறு மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவிட்டாா்.
அதன்பேரில் நகரமைப்பு பிரிவு அலுவலா் ரவிசந்திரன், காவல் துறை உதவி ஆணையா் காா்த்திகேயன், மாநகராட்சி அலுவலா்கள், குடிசை மாற்று வாரிய அலுவலா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சனிக்கிழமை இடித்து அகற்றினா்.