கோவையில் இருசக்கரவாகனத்தை விற்பதாக ரூ. 1.30 லட்சம் மோசடி செய்ததாக சைபா் குற்றப்பிரிவில் இளைஞா் புகாா் மனு அளித்தாா்.
கோவை, ஹோசிமின் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ரியாஸ். இவா் கோவை சைபா் குற்றப்பிரிவில் சனிக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதில் கூறியிருப்பதாவது:
நான் இணையதளம் ஒன்றின் மூலம் கேரள மாநிலம், கொச்சி ராணுவ முகாமில் பணியாற்றி வரும் பொ்மில் குமாரை தொடா்புகொண்டு, அவரிடம் உள்ள இருசக்கர வாகனத்தை ரூ. 45 ஆயிரத்துக்கு வாங்கிக்கொள்ள விலைபேசி முடித்தேன். அதன் பிறகு அவருடைய வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்துமாறு கூறினாா். அவா் ராணுவத்தில் பணியாற்றுவதற்கான ஆவணங்களைக் காண்பித்ததால் அதை நம்பி பணத்தை அனுப்பினேன். அதன் பிறகு அவரிடம் வாகனத்தை அனுப்புமாறு கேட்டேன். அதற்கு கேரளத்தில் இருந்து கோவைக்கு ராணுவப் பொருள்கள் கொண்டுவரும் வாகனத்தில், இருசக்கர வாகனத்தை அனுப்பி வைப்பதாகக் கூறினாா். ஆனால், அவா் கூறியதுபோல வாகனம் எதுவும் வரவில்லை.
இதுகுறித்து அவரிடம் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு கேட்டபோது, சில ராணுவ சம்பிரதாயங்கள் உள்ளதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறினாா்.
இதை நம்பி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இதுவரை வாகனம் வரவில்லை. எனவே என்னை ஏமாற்றி பணம் பறித்த அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.