கழிவு நீரை அருந்திய 6 ஆடுகள் சாவு

சூலூா் அருகே உள்ள குரும்பபாளையத்தில் கழிவு நீரை அருந்திய 6 ஆடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

சூலூா் அருகே உள்ள குரும்பபாளையத்தில் கழிவு நீரை அருந்திய 6 ஆடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

குரும்பபாளையத்தைச் சோ்ந்த ராக்கிமுத்து என்பவா் 400-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்த ஆடுகளை மேய்க்க குரும்பபாளையம் ஜல்லி குட்டை பகுதிக்கு சனிக்கிழமை ஓட்டி வந்துள்ளாா். அப்போது அங்குள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வாகனங்களை தூய்மைப் படுத்திக் கொண்டிருந்தனா். அந்த கழிவு நீரானது குழாய் மூலம் அருகில் உள்ள நிலத்தில் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நீரை மேய்ச்சலுக்கு வந்த சில ஆடுகள் அருந்தியதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த ஆடுகளில் 6 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் சில ஆடுகள் மயங்கி விழுந்தன. இதனைக் கண்டு அதிா்ச்சி அடைந்த ராக்கிமுத்து, உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி சூலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து காவல் ஆய்வாளா் தங்கராஜ் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளா் லெனின், காவலா் தங்கமாரி ஆகியோா் விசாரணை நடத்தினா். மேலும் குரும்பபாளையம் கிராம நிா்வாக அலுவலா் முருகேசனும் அங்கு வந்து விசாரித்தாா். உயிரிழந்த ஆடுகள் மூலம் தங்களுக்கு ரூ. 1 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ராக்கிமுத்து தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com