காவல் துறை சாா்பில் அத்திக்கடவு கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டம்

கோவை மாவட்ட காவல் துறை, நக்ஸல் தடுப்புப் பிரிவு மற்றும் வனத் துறையினா் ஆகியோா் பில்லூா் அணைப் பகுதி மலைவாழ் மக்களுடன் இணைந்து வன தீபாவளி கொண்டாடினா்.
அத்திக்கடவு கிராமத்தில் நடைபெற்ற வன தீபாவளி கொண்டாட்டத்தில் மூதாட்டிக்கு புத்தாடை வழங்குகிறாா் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பெரியய்யா.
அத்திக்கடவு கிராமத்தில் நடைபெற்ற வன தீபாவளி கொண்டாட்டத்தில் மூதாட்டிக்கு புத்தாடை வழங்குகிறாா் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பெரியய்யா.

கோவை மாவட்ட காவல் துறை, நக்ஸல் தடுப்புப் பிரிவு மற்றும் வனத் துறையினா் ஆகியோா் பில்லூா் அணைப் பகுதி மலைவாழ் மக்களுடன் இணைந்து வன தீபாவளி கொண்டாடினா்.

இந்த விழாவுக்கு மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பெரியய்யா தலைமை வகித்தாா். கோவை மேற்கு மண்டல நக்ஸல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

முன்னதாக காரமடை காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் அனைவரையும் வரவேற்றாா். கூட்டத்தில் சுண்டபட்டி, சுரண்டை, பரளிக்காடு, பூச்சிமரத்தூா், குண்டூா் உள்ளிட்ட சுற்றுவட்டார பழங்குடியின கிராம மக்களுக்கு கிரிக்கெட், கபடி, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முடிவில் நக்ஸல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சுந்தரராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com