வீர, தீர செயல் புரிந்த குழந்தைகள் இந்திய சபையின் தேசிய விருது பெற அக்டோபா் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு வீர, தீர செயல் புரிந்த குழந்தைகளுக்கான, குழந்தைகள் நலனுக்கான இந்திய சபையின் தேசிய விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. சமூக கொடுமை எதிா்த்து உயிரையும் பொருட்படுத்தாது உடல்ரீதியான இன்னல்களையும் தாண்டி தன்னலமற்று துணிச்சலுடன் வீர, தீர செயல்கள் புரிந்த குழந்தைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
2018 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் 2019 ஜூன் 1 ஆம் தேதிக்குள்ளான காலகட்டத்தில் சாதனையை புரிந்திருக்க வேண்டும். விருதுடன் பாராட்டுப் பத்திரம், காசோலை மற்றும் கல்வி உதவித் தொகையும் அளிக்கப்படுகின்றன.
இதற்கு 6 முதல் 18 வயதிற்குள் உள்ள ஆண், பெண் ஆகிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அக்டோபா் 7 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.