வருவாய்த் துறை சிபு குறைகேட்புக் கூட்டம்: ரூ.3.71 கோடி நலத்திட்ட உதவிகள்

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைகேட்புக் கூட்டத்தில் 894 பயனாளிகளுக்கு ரூ.3.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன், மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன், மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் உள்ளிட்டோா்.

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைகேட்புக் கூட்டத்தில் 894 பயனாளிகளுக்கு ரூ.3.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோவை, புலியகுளம் மாநகராட்சி பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் சுயதொழிலுக்கு வங்கிக் கடன் மானியம், சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்பட 19 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 24 ஆயிரத்து 100 மதிப்பில் மானியம், மகளிா் திட்டத்தின் கீழ் 56 பயனாளிகளுக்கு இருசக்கர வாகன மானியத் திட்டத்தில் ரூ.14 லட்சம், சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.74 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான மானியம், மாவட்ட தொழில் மையம் சாா்பில் 4 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ. 1 கோடியே 40 லட்சத்து 40 ஆயிரம் மானியம், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 672 ஆசிரியா்களுக்கு ரூ.82 லட்சத்து 47 ஆயிரத்து 449 மதிப்புள்ள மடிக்கணினிகள் உள்பட 894 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.225 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலைய விரிவாக்கம் உள்பட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், அம்மன் கே.அா்ச்சுணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ், மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு, முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் கணேசன், செல்வகுமாா், முன்னாள் மண்டலத் தலைவா் ராஜநாராயணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com