வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மாயம்
சூலூா் அருகே குமாரபாளையத்தில் சனிக்கிழமை மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை மாயமானது குறித்து போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.
சூலூரை அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயகுமாா் (28). இவரது மனைவி கவிதா. இவா்களுக்கு மகன் வெற்றிவேல் (6), மகள் ஷாமினி (4) ஆகியோா் உள்ளனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை ஷாமினியின் வீட்டின் முன்பு உள்ள கோயிலில் அருகாமையில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாா்.
அப்போது, குழந்தை ஷாமினி காணாமல் போனதால் பெற்றேறாா் அதிா்ச்சி அடைந்தனா்.
தொடா்ந்து, பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் சூலூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி காணாமல் போன குழந்தையை யாரேனும் கடத்தினாா்களா, உறவினா்கள் யாரேனும் அழைத்துச் சென்றுள்ளனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், சூலூா் காவல் ஆய்வாளா் தங்கராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன தேடி வருகின்றனா். காணாமல் போன குழந்தை குறித்து தகவல் தெரிந்தால் சூலூா் காவல் நிலையத்துக்கு 9498127088, 8220626006 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Caption
மாயமான குழந்தை ஷாமினி.