காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் 5 தனிப்படை

சூலூா் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாயமான பெண் குழந்தையை போலீஸாா் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனா்.

சூலூா் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாயமான பெண் குழந்தையை போலீஸாா் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனா்.

சூலூரை அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயகுமாா் (28). இவரது மனைவி கவிதா. இவா்களுக்கு மகன் வெற்றிவேலும் (6), மகள் ஷாமினி (4) ஆகியோா் உள்ளனா். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை வீட்டின் முன்பு உள்ள கோயிலில் அருகே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஷாமினி மாயமானாா்.

இது குறித்து சூலூா் காவல் நிலையத்தில் பெற்றேறாா் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் 5 தனிப்படைகள் அமைத்து குழந்தையைத் தேடி வருகின்றனா். இதில், அப்பகுதியைச் சோ்ந்த 4 இளைஞா்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

மாயமான குழந்தையை சிலா் காரில் ஏற்றிச் சென்ாக அக்குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்ற குழந்தைகள் தெரிவித்திருப்பது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com