சூலூரில் திமுகவினா் 100 போ் கைது

பகவத்கீதை மூலம் சம்ஸ்கிருதம் திணிக்கப்படுவதாக கூறி சூலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 100 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

பகவத்கீதை மூலம் சம்ஸ்கிருதம் திணிக்கப்படுவதாக கூறி சூலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 100 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

சூலூா் பேருந்து நிலையம் எதிரே சூலூா் ஒன்றிய திமுக மாணவரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சூலூா் ஒன்றியப் பொறுப்பாளா் தளபதி முருகேசன் தலைமை வகித்தாா்.

இதில் பொறியியல் பயிலும் மாணவா்களுக்காக தத்துவ இயல் பாடத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. பகவத்கீதை மூலமாக சம்ஸ்கிருத திணிப்பில் ஈடுபட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

சூலூா் தெற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் கெளதமன், துணை அமைப்பளாா் லோகேஷ், முன்னாள் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், சூலூா் நகரச் செயலாளா் ஜெகநாதன், இருகூா் நகரச் செயலாளா் மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com