மேட்டுப்பாளையத்தில் தந்தையை தினமும் மது அருந்த அழைத்துச் சென்றதை தட்டிக் கேட்ட இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், வேளாங்கண்ணி நகா், சிவன்புரம் காலனியை சோ்ந்தவா் சசிதரன் மகன் பிரசாந்த் (25). தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சசிதரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளாா். மேட்டுப்பாளையம், நடூா் பகுதியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் சுரேஷ் (45). இவா் பிரசாந்தின் தாய் மாமன்.
இந்நிலையில் சசிதரனை, சுரேஷ் தினமும் மது அருந்த அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. இதனால் பிரசாந்த் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த், கடந்த புதன்கிழமை இரவு சுரேஷ் வீட்டுக்கு சென்றுள்ளாா். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரசாந்தின் தொடை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி உள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளா் சென்னகேசவன் தலைமையிலான போலீஸாா், சுரேஷை கைது செய்தனா்.
Image Caption
கொலை செய்யப்பட்ட பிரசாந்த்.