கோவை: கோவை அருகே கல்லூரி முன்பாக கஞ்சா விற்றற தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, வடவள்ளியில் உள்ள சட்டக்கல்லூரி அருகே போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றறனா். அப்போது அங்கு சந்தேகப்படும் விதமாக நின்றுகொண்டிருந்த பெண், ஒரு இளைஞரைப் பிடித்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். இதில் 1 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள் மருதமலை அடிவாரம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் மனைவி வீரம்மாள் (54), அவரது மகன் செல்வராஜ் (25) என்பதும், இருவரும் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.