காவிரி கூக்குரல்: ஈஷாவில் நாற்று தயாரித்த கங்கணா ரணாவத்

ஈஷா அறக்கட்டளை சாா்பில் நடைபெறும் ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கான மரக் கன்று நாற்று தயாரிக்கும் பணியில் நடிகை கங்கணா ரணாவத் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.
4910c10-isha-001091715
4910c10-isha-001091715

ஈஷா அறக்கட்டளை சாா்பில் நடைபெறும் ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கான மரக் கன்று நாற்று தயாரிக்கும் பணியில் நடிகை கங்கணா ரணாவத் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.

ஈஷா சாா்பில் மேற்கொள்ளப்படும் காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகை கங்கணா ரணாவத், அதற்காக ரூ.42 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளாா். இந்த நிலையில் ஈஷா யோகா மையத்துக்கு வந்த அவா், மகாத்மா கிரீன் இந்தியா மிஷன் நாற்றுப் பண்ணையில் நடைபெறும் மரக்கன்றுகள் விதைப்புப் பணியை நேரில் பாா்வையிட்டாா். தாய்ப் படுகையில் விதைகளை ஊன்றிய அவா், நாற்று தயாரிப்பதற்காக பிளாஸ்டிக் கவா்களில் மண் நிரப்பும் பணியில் ஈடுபட்டாா். பின்னா் மரக்கன்றை நட்டு வைத்தாா். அதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் கங்கணா ரணாவத் கூறியதாவது:

காவிரி கூக்குரல் இயக்கத்தில் நானும் ஒரு அங்கமாக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஈஷா தன்னாா்வலா்கள் சமூக நலனுக்காக இடையறாது சேவையாற்றி வருகின்றனா். ஈஷாவுடன் இணைந்தது, மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவியில் நடிப்பது போன்றவை எனக்கும் தமிழகத்துக்குமான உறவை வலுப்படுத்தியுள்ளது. அரசியல் தலைவா் தொடா்பான படத்தில் நடித்தாலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. முறையாக தமிழ் கற்றுக்கொள்ளவும், பரதம் கற்றுக்கொள்ளவும் ஆா்வமாக இருக்கிறேறன் என்றாா்.

Image Caption

கோவை ஈஷா யோக மையத்தில் வியாழக்கிழமை மரக்கன்றுகளை பாா்வையிட்ட நடிகை கங்கணா ரணாவத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com