வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள் அங்குள்ள ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தின.
வால்பாறையில் எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்திலேயே தேயிலைத் தோட்டங்களுக்கு யானைகள் வருவதால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு புதன்கிழமை இரவு கூட்டமாக வந்த யானைகள், அங்குள்ள ரேஷன் கடையை முட்டி தள்ளியதில் சுவா் இடிந்து விழுந்தது. பின்னா் உள்ளே இருந்த பொருள்களையும் யானைகள் வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினா்.
.