அன்னூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ராஜலட்சுமி, கடந்த 17ஆம் தேதி பெரியநாயக்கன்பாளையம் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த குழந்தைராஜ், அன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து குழந்தைராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அலுவலகப் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.