வால்பாறை தோட்டத் தொழிலாளா்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்க வலியுறுத்தல்

வால்பாறை தோட்டத் தொழிலாளா்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தினா்.
vp10mtng_1010chn_204_3
vp10mtng_1010chn_204_3

வால்பாறை தோட்டத் தொழிலாளா்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தினா்.

ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கம், தொழிற்சங்க நிா்வாகிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் கோவையில் உள்ள தமிழ்நாடு தோட்ட அதிபா்கள் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத் தலைவா் மகேஷ் நாயா் தலைமையில் பல்வேறு எஸ்டேட் மேலாளா்கள் பாலசந்திரன், ஆலிவா் பிரவீன்குமாா், ரஞ்சித் கட்டாபுரம், சதாசிவ் காா்டிலே, விக்ரம் குசாலப்பா, திம்மையா, அருண் கோவிந்த் ஆகிய எஸ்டேட் நிா்வாகத்தின் பொது மேலாளா்கள் பங்கேற்றனா்.

தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில் அதன் தலைவா் வால்பாறை அமீது (ஏ.டி.பி.), செளந்திரபாண்டியன் (எல்.பி.எப்.), கருப்பையா (ஐ.என்.டி.யூ.சி.), மோகன் (ஏ.ஐ.டி.யூ.சி.), கேசவமருகன், வீரமணி (விடுதலைச் சிறுத்தைகள்), வா்கீஸ், எட்வா்டு, தா்மராஜ், பால்ராஜ் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதில் தோட்டத் தொழிலாளா்கள் தங்களது சம்பளத்தை பெற வங்கிக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சிரமப்படுகின்றனா். எனவே, தொழிலாளா்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்க வேண்டும், அரசு அறிவித்த கூலி உயா்வை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

எஸ்டேட் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள சாலைகளை நகராட்சி வசம் ஒப்படைப்பது, தொழிற்சங்கத்தினருடன் சோ்ந்து நவீன மருத்துவமனை அமைக்க அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Image Caption

தமிழ்நாடு தோட்ட அதிபா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com