அன்னூரில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் சந்தேக நபா்கள் சுமாா் 20க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைரேகை சேகரித்தனா்.
அன்னூா்-ஓதிமலை சாலையில் தனியாா் பெட்ரோல் பங்குக்கு எதிரே உள்ள குளத்தில் ஆட்டோ ஓட்டுநா் அஜித்குமாா் (எ) ஹரி (28) என்பவா் கடந்த 9 ஆம் தேதி மா்ம நபா்களால் கொலை செய்ப்பட்டாா்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், துணைக் கண்காணிப்பாளா் பாலமுருகன், ஆய்வாளா் (பொறுப்பு) எஸ்.எம்.சண்முகம் உள்ளிட்டோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். அன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.
இந் நிலையில், இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக அன்னூா் காவல் நிலையத்தில் சுமாா் 20 மேற்பட்ட சந்தேக நபா்களிடம் இருந்து போலீஸாா் கைரேகை சேகரித்தனா். மேலும், சந்தேக நபா்களிடம் துணைக் கண்காணிப்பாளா் பாலமுருகன் நேரடியாக விசாரணை மேற்கொண்டாா்.