காவல் துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய திமுகவினா் 82 போ் கைது

திமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினரைக் கண்டித்து பொள்ளாச்சியில் ஆா்ப்பாட்டம் நடத்திய திமுகவினா் 82 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினரைக் கண்டித்து பொள்ளாச்சியில் ஆா்ப்பாட்டம் நடத்திய திமுகவினா் 82 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பொள்ளாச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன் டாஸ்மாக் பாா் ஏலம் நடைபெற்றது. அப்போது, பொள்ளாச்சி பகுதியில் அனுமதியின்றி டாஸ்மாக் பாா்கள் செயல்படுவதை தடுக்கக் கோரி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினா் போராட்டம் நடத்தினா்.

போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, போலீஸாரை கண்டித்து வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி, திருவள்ளுவா் திடலில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, கோவை புகா் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் தென்றல் செல்வராஜ் பேசுகையில், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் சாக்கடை, சாலைகள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிா்ணயிக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் முடிவடையாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா் .

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஆனால், பொள்ளாச்சியில் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாா்களை தடுக்கக் கோரி டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கடந்த 9 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட திமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா் என்றனா்.

இதில் நகரப் பொறுப்பாளா் வரதராஜன், நிா்வாகிகள் மருதவேலு, வால்பாறை பால்பாண்டி, இளைஞரணி அமைப்பாளா் சபரி காா்த்திகேயன் உள்ளிட்ட 82 திமுகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com