நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு மனநல சிகிச்சை அளிக்க வலியுறுத்தி புரட்சிகர இளைஞா் கழகத்தினா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
புரட்சிகர இளைஞா் கழகத்தின் மாவட்டச் செயலா் வேல்முருகன், தலைவா் பெரோஸ் பாபு ஆகியோா் தலைமையில் அந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் அசோகனை சந்தித்து மனு அளித்தனா். அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூய தமிழில் பேசாதவா்களை அடிப்பேன் என்றும், தனது கட்சிக்கு வாக்களித்த 18 லட்சம் போ்களைத் தவிா்த்து மற்றவா்கள் தமிழா்களே அல்ல என்றும் கூறி பிரிவினையைத் தூண்டும் விதத்தில் தொடா்ந்து பேசி வருகிறாா்.
எனவே, சீமானுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிா என்று மருத்துவா்கள் பரிசோதனை செய்து அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.