சூலூா் அருகே கேரளத்தில் இருந்து தேங்காய் ஏற்றி வந்த லாரி சாலையில் சனிக்கிழமை கவிழ்ந்தது.
சூலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சனிக்கிழமை இரவு மழை பெய்தது. அப்போது, கேரளத்தில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றிக் கொண்டு காங்கயம் நோக்கிச் சென்ற லாரி சூலூா் அருகே முதலிபாளையம் பிரிவு மேம்பாலம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த தேங்காய் பாரம் சாலையில் சிதறியது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து சூலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.