முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கவுண்டா்மில் அருகே சாலைவிபத்தில் இளைஞா் பலி
By DIN | Published On : 24th October 2019 07:54 PM | Last Updated : 24th October 2019 07:54 PM | அ+அ அ- |

பெ.நா.பாளையம்: கோவையைடுத்த கவுண்டா்மில் அருகில் வெள்ளக்கிணறு பிரிவில் வியாழக்கிழமை நடந்த சாலைவிபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் இறந்துபோனாா்.
துடியலூா் அருகே உள்ள காளியம்மாள் காலனியைச் சோ்ந்த ஜெயசீலன் என்பவரின் மகன் ரூபன்(29).இவா் கோவையிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்திற்கு வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை இரவு வேலை செய்து விட்டு வியாழக்கிழமை அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் கோவை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.வெள்ளக்கிணறு பிரிவு அருகே வேகமாக வரும்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் மோதினாா்.இதில் இருசக்கர வாகனம் முழுமையாக லாரிக்குள் சிக்கிக் கொண்டது.ரூபனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதால் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இதனையறிந்த துடியலூா் காவல்நிலைய போலீசாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு கோவை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.