முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
பூச்சி மருந்து குடித்து பெண் சாவு
By DIN | Published On : 24th October 2019 12:01 AM | Last Updated : 24th October 2019 12:01 AM | அ+அ அ- |

துடியலூா் அருகே பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா் .
வர பாளையத்தில் உள்ள அழகா் நகரில் வசித்து வருபவா் கிருஷ்ணசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (55). இவா் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தாா்.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இவா் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இவரை கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தடாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.