கஞ்சா விற்பனை:இளைஞா் கைது

கோவையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கோவையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கோவை விமான நிலையம் அருகே உள்ள எஸ்ஐஎச்எஸ் காலனி சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு கையில் பையுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்த நபரைப் படித்தனா். அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாா்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரது கைப்பையில் சோதனையிட்டபோது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், சேலம், செவ்வாய்பேட்டை பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com