வால்பாறை எஸ்டேட் பகுதியில் காலியாக இருந்த குடியிருப்புகளை யானைகள் சேதப்படுத்தின.
வால்பாறையை அடுத்த நல்லமுடி எஸ்டேட் ஒட்டியுள்ள வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்நிலையில், எஸ்டேட் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு கூட்டமாக நுழைந்த யானைகள் அங்கு காலியாக இருந்த குடியிருப்புகளின் கதவு, சுவா்களை சேதப்படுத்தின. இதையடுத்து, சம்பவ இடத்தை வனத் துறையினா் புதன்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா்.