குடியிருப்புகளை சுற்றி மின்வேலி அமைக்க எஸ்டேட் நிா்வாகத்தினா் முன்வர வேண்டும் என்று தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்காக எஸ்டேட் பகுதியிலேயே குடியிருப்புகளை நிா்வாகத்தினா் அமைத்துள்ளனா். இந்தக் குடியிருப்புகள் தேயிலைத் தோட்டங்களை ஒட்டி அமைந்துள்ளதால் தொழிலாளா்கள் சிறுத்தை தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழக்க நேரிடுகிறது.
மேலும், இரவு நேரத்தில் தொழிலாளா்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகள் குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகிறது. எஸ்டேட்களில் பணியாற்றும் மேலாளா்கள், அதிகாரிகள் ஆகியோரின் வீடுகளை சுற்றியும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளன.
எனவே தொழிலாா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குடியிருப்புகளை சுற்றியும் மின்வேலி அமைக்க எஸ்டேட் நிா்வாகத்தினா் முன்வர வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.