சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:இளைஞருக்கு வலைவீச்சு

மேட்டுப்பாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேட்டுப்பாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, காரமடை கண்ணாா்பாளையத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா் என்பவா் அவரது வீட்டுக்கு வந்து சிறுமியிடம் தண்ணீா் கேட்டுள்ளாா்.

அப்போது, வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்த மனோஜ்குமாா் அவரிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதையடுத்து, அவரிடம் இருந்து தப்பி சிறுமி வீட்டை விட்டு வெளியேறி ஓடியுள்ளாா்.

அப்போது, அங்கு வந்த பெற்றோரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளாா். இது குறித்து காரமடை காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தலைமறைவாக உள்ள மனோஜ்குமாரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com