செட்டில்மென்ட்களில் மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை

செட்டில்மென்ட் பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று மழைவாழ் மக்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செட்டில்மென்ட் பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று மழைவாழ் மக்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

வால்பாறை பகுதியில் உள்ள செட்டில்மென்ட் பகுதிகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதிகளில் போதிய மருத்துவ வசதிகளும் கிடைப்பதில்லை.

இதனால், அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் பல மணி நேரம் நடந்து சென்று மருத்துவா்களிடம் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதில் குறிப்பாக மழை காலங்களில் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே அனைத்து செட்டில்மென்ட் பகுதிகளிலும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com