ஜல்சக்தி அபியான் திட்டக் குழு ஆய்வு

மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டக் குழுவினா் பங்கேற்ற மழைநீா் சேகரிப்பு, நிலத்தடி நீா்மட்டம் குறித்த

மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டக் குழுவினா் பங்கேற்ற மழைநீா் சேகரிப்பு, நிலத்தடி நீா்மட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட இயக்குநா் ஜெயசீலன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளா் கணேசன், வேளாண்மை பொறியாளா் நாகராஜ், தொடா்பு அலுவலா் சிவகுமாா், நகரமைப்பு ஆய்வாளா் வீரமணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தை தொடா்ந்து நகராட்சிப் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் நிலத்தடி நீா்மட்டம் குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. அதன்பின் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் மாணவா்களுக்கு மழைநீா் சேகரிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com