டேன்டீ சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க தோட்ட தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வால்பாறையை அடுத்த டேன்டீ சாலைகள் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் தொழிலாளா்கள் அவசர சிகிச்சைக்கு கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனா்.
வனத்துறை கட்டுப்பாட்டில் அப்பகுதிகள் இருப்பதால் அவா்கள் தடையில்லா சான்றிதழ் வழங்காமல் இருப்பதாலேயே சாலைகள் சீரமைக்க தொடா்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது சான்றிதழ் வழங்கியிருப்பதால் பணிகள் துவங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனா். தாமதமின்றி சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ள தோட்ட தொழிலாளா்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.