பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கான சிறப்புகுறைதீர் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதாள சாக்கடை, முதியோர் உதவித்தொகை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான குறைகள் தொடர்பாக மனு அளிக்க சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார், கோட்டாட்சியர் ரவிகுமார், நகராட்சி ஆணையர் கண்ணன், நகராட்சி பொறியாளர் முருகேசன்
உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.