அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை அடித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை, ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (65).க் இவர் பாரதியார் காலனியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், காந்தி மாநகரைச் சேர்ந்த சூர்யா (23) என்பவர் தனது நண்பர்களுடன் அடுக்குமாடி குடியிருப்புக்குள் அமர்ந்து மது குடிக்க திங்கள்கிழமை வந்துள்ளார். அவரை நாராயணன் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சூர்யா கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் கிடந்த கட்டையால் நாராயணனைத் தாக்கியுள்ளார்.
இதில் அவரது சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த நாராயணசாமி புதன்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, போலீஸார் கொலை வழக்காகப் பதிவு செய்து சூர்யாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.