ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பாரதி விழா

துடியலூரை அடுத்த வட்டமலைப்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பாரதியாரின்

துடியலூரை அடுத்த வட்டமலைப்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பாரதியாரின் நினைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பி.எல்.சிவகுமார் தலைமை வகித்தார். இதில் எழுத்தாளர் சூரியகாந்தன் கலந்து கொண்டு "பாரதி ஒரு ஞானக்கவி' என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் பாரதியாரின் கவிதைகள் மற்றும் பாடல்களை பாடினர். இவர்களுக்கு சூர்யகாந்தன் தான் எழுதிய நூல்களை பரிசாக வழங்கினார். இறுதியில் கணிப்பொறியியல் துறை மாணவர் நா.சக்திவேல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com