மேட்டுப்பாளையம் அருகே காரமடை புஜங்கனூர் ஸ்ரீ விநாயகா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ஓணம் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை பள்ளி முதல்வர் டாக்டர் ஹரிஹரசுதன் தொடங்கிவைத்தார். பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி முன்னிலை வகித்தார்.
பள்ளித் தாளாளர் சோமசுந்தரம் விழா சிறப்புரையாற்றினார்.
இதில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்தும், மாவேலி மன்னன் வேடமணிந்தும் விழாவில் பங்கேற்றனர். பின்னர் ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து அத்தப்பூ கோலமிட்டனர்.
இறுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.