அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக மூன்று பெட்டிகள்

பொள்ளாச்சி மக்களவை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும்

பொள்ளாச்சி மக்களவை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக மூன்று பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.                                                                             
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாகப் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இதையடுத்து அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே பொதுமேலாளர் ராகுல்ஜெயின், மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் 2020 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதிகொண்ட மூன்று பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com