சேலையாறு அணை பகுதியில் 59 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் முழுக் கொள்ளவான 160 அடியை எட்டியது. இந்நிலையில் பகல் நேரத்தில் சாரல் மழை பெய்யும் நிலையில் தினமும் இரவில் கனமழை பெய்கிறது. கடந்த புதன்கிழமை அதிகபட்சமாக சோலையாறு அணைப் பகுதியில் 59 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல வால்பாறை 46 மி.மீ., சின்னக் கல்லாறு 38 மி.மீ., நீராறு அணை 35 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.