நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம்  மர்மநபர்கள் நான்கு பவுன் நகையைப் பறித்துச் சென்றனர்.

நடந்து சென்ற பெண்ணிடம்  மர்மநபர்கள் நான்கு பவுன் நகையைப் பறித்துச் சென்றனர்.
சூலூரை அடுத்த கே.கே.சாமி நகரைச் சேர்ந்தவர் நாராயணன். சூலூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (46). இவர் சூலூரை அடுத்த குமரன் கோட்டம் பகுதியில்  புதன்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முத்துலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 
இதுகுறித்து முத்துலட்சுமி புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com