அவிநாசி அருகே பள்ளி மாணவியை துன்புறுத்திய இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
அவிநாசி, சேவூர் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை, ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (23) என்பவர், கையை பிடித்து இழுத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, கோவிந்தசாமி மீது போக்úஸா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.