பெரியநாயக்கன்பாளையத்தில் சாலையில் நடந்து சென்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வீரபாண்டி பிரிவில் உள்ள சக்தி நகரைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி கீதாலட்சுமி (52). திருமலைநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வீரபாண்டி பிரிவில் இருந்து அவரது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கீதாலட்சுமியிடம் அருந்து 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.